ரூ 30 கோடியில் இன்போசிஸ் பயிற்சி மையம்
டெல்லி:
இந்தியாவின் புகழ்வாய்ந்த சாபட்வேர் நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம்
ரூ 30.04 கோடி முதலீட்டில் பயிற்சி மையத்தை மைசூரில் துவக்கவுள்ளது.
இந்த பயிற்சி மையம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் செயல்பட துவங்கும். இதுகுறித்து வியாழக்கிழமை இன்போசிஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இந்த பயிற்சி மையத்தில் வகுப்பறைகள், வர்த்தக மையங்கள், கருந்தரங்க அறைமற்றும் மிகப் பெரிய நூலகம் ஆகியவை இருக்கும். ஆண்டுதோறும் 1,000பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்திருக்கிறோம்.
பல துறைகளிலும் சிறந்து விளங்குபவர்கள் மூலமாக பலவித பயிற்சி வகுப்புகளையும்நடத்த உள்ளோம். இது இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்பவர்களுக்கு பெரிதும்உதவியாக இருக்கும். அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் அமையும்.
இந்த பயிற்சி மையத்தில் முதலில் இன்போசிசில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் பயிற்சிஅளிக்கப்படும், பின்னர் இது வாடிக்கையாளர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும்பங்குதாரர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
இன்போசிஸ்சின் வளர்ச்சிக்கும், மாறிவரும் உலக நிலைக்கு ஏற்றவாறுபணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதும் தான் இந்த பயிற்சி மையம் துவக்கப்பட்டதன்நோக்கமாகும் என கூறப்பட்டுள்ளது.
இன்போசின் நிர்வாக இயக்குனரும், தலைவருமான நந்தன் நிலேகனி கூறுகையில்,இந்த பயிற்சி மையம் இன்போசிசின் சிறப்பம்சங்களில் ஒன்று என்றார்.
விப்ரோவுக்கு அடுத்த படியாக இன்போசிஸ்தான் அதிக அளவில் சாப்ட்வேர்ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்போசில் 2000, டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாவது காலண்டின்போது 985 புதிய பணியாளர்களை,பணிக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம்தற்போதைய இன்போசிசின் பணியாளர்கள் எண்ணிக்கை 8.910 என்றஎண்ணிக்கையை எட்டியுள்ளது.
இன்போசின் வருவாய் மூன்றாவது காலண்டில் ரூ 5.51 பில்லியன் என்ற அளவைஎட்டியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.