தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
கோவை:
விவசாயிகளுக்கு சீரான மின்சாரம் விநியோகம் செய்ய வேண்டும், இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது எனவலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் எம். ஆர் சிவசாமி நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:
மத்திய அரசு இலவச மின்சாரத்தை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளது. ஒரு யூனிட் ஒன்றிற்கு 50 பைசா வசூல் செய்வதுஎன்ற முடிவை மேற்கொண்டுள்ளது உறுதியாகத் தெரிய வந்துள்ளது.
இந்தியா முழுவதிலும் ஒரே சீரான நீர்ப்பாசன வசதி ஏற்படும் வரை இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது.தேர்தலுக்குப் பிறகு ரத்து செய்தால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவர்.
கூட்டுறவுக் கடன்களை வசூல் செய்ய ஜப்தி நடவடிக்கைகளில் இறங்கக் கூடாது. பகலில் 6 மணி நேரம் இரவில் 10மணி நேரம் விவசாயிகளுக்கு சீரான மின்சாரம் விநியோகம் செய்ய வேண்டும்.
அத்திக் கடவு, அவிநாசித் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். கடன் வட்டி முழுவதையும் விவசாயிகளுக்குத்தள்ளுபடி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.












Click it and Unblock the Notifications