த.மா.கா.வுக்கு அடி மேல் அடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த சட்டசபைத் தேர்தலில் தமாகா வெற்றி பெற்ற தொகுதிகளில் 21 தொகுதிகளை தன் வசம் வைத்துக் கொண்டஜெயலலிதா, தற்போது மேலும் 3 தொகுதிகளை தமாகாவிடமிருந்து பறித்து அவற்றை பாமகவுக்குக்கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து கடந்த முறை வெற்றி பெற்ற 39 தொகுதிகளில் 24 தொகுதிகளை இழந்துள்ளது தமாகா.

வரும் சட்டசபைத் தேர்தலில் பாமக போட்டியிடும் 27 தொகுதிகளின் பட்டியலும், இந்திய கம்யூனிஸ்ட்போட்டியிடும் 8 தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த முறை இந்திய கம்யூனிஸ்ட் வெற்றி பெற்ற 2 தொகுதிகளை அதிமுக எடுத்துக் கொண்டுள்ளது. பிறதொகுதிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இதுதவிர அதிமுக போட்டியிடவுள்ள 141 தொகுதிகளில் 21 தொகுதிகள் தமாகா கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதொகுதிகளாகும்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் தமாகாவுக்கு 39 உறுப்பினர்கள் இருந்தனர். இதில் மயிலாடுதுறைஎம்.எல்.ஏ.அபுல்ஹாசன், நத்தம் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம் ஆகியோர் இறந்து விட்டனர். எம்.எல்.ஏ.சொக்கர்தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

இதனால் தமாகா எம்எல்ஏக்களின் பலம் 36 ஆகக் குறைந்துள்ளது. இதில் 21 தொகுதிகளை அதிமுக எடுத்துக்கொண்டுள்ளது. தற்போது மேலும் 3 தொகுதிகளைப் பறித்து பாமகவுக்குக் கொடுத்துள்ளது. அதாவதுதமாகாவிடமிருந்து பூந்தமல்லி, சிதம்பரம், ராதாபுரம் ஆகிய தொகுதிகள் பறிக்கப்பட்டு பாமகவுக்குக்கொடுக்கப்பட்டுள்ளன.

இதனால் கடந்த முறை வெற்றி பெற்ற 24 தொகுதிகளை இழந்துள்ளது தமாகா. இந்தத் தொகுதிப்பங்கீட்டில்பெருமளவு பாதிக்கப்பட்ட கட்சியாக தமாகா கருதப்படுகிறது. இதனால் தமாகா தலைவர்கள் மற்றும் தொண்டர்கள்மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

வேறு வழி எதுவும் இல்லாததால் ஜெயலலிதா தரும் மிச்சமுள்ள தொகுதிகளை ஏற்றுக் கொண்டாக வேண்டியநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தமாகா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+