குமரிக்காக பிரசாரம் செய்த குழந்தைகள்
சென்னை:
குழந்தைகள் சகிதம், தனது தந்தை குமரி அனந்தனுக்காக அவரது மகள் தமிழிசை, திருவொற்றியூர் தொகுதியில்தேர்தல் பிரசாரம் செய்தார்.
தொண்டர் காங்கிரஸ் சார்பில் குமரி அனந்தன் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்காகஅவரது குடும்பத்தினரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மகள் டாக்டர் தமிழிசை, குழந்தைகள் சகிதம் திருவொற்றியூர் தொகுதியில் தந்தைக்காக புதன்கிழமை பிரசாரம்செய்தார். டாக்டர் தமிழிசை பாரதீய ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பிரசாரத்தின்போது அவர் பேசுகையில், எனது தந்தை நல்லவர் என்பது மட்டுமல்ல, தொகுதி மக்கள்பிரச்சினை குறித்து பக்குவமாக பேசி காரியம் சாதிக்கக் கூடியவர் என்பதற்காகவே அவருக்காக பிரசாரம்செய்கிறேன் என்றார்.
பிரசாரத்தின்போது பல குழந்தைகள், மழலைக் குரலில் பேசி குமரி அனந்தனுக்காக பிரசாரம் செய்தது அப்பகுதிமக்களுக்கு நல்ல காமடியாக இருந்தது.