வெற்றியை நோக்கி இலங்கை அமைதி பேச்சுவார்த்தை
கொழும்பு:
நார்வே தூதுக்குழுவின் தலைவர் எரிக் சொல்ஹேம் அடுத்த வாரம் இலங்கை அதிபர்சந்திரிகாவை சந்தித்து விடுதலை புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தவதுகுறித்து விவாதிக்கவுள்ளார். இம் முறை அவரது முயற்சி வெற்றி பெறக்கூடும் என்றநம்பிக்கை நிலவுகிறது
இந்த மாதம் நடக்கவுள்ள பேச்சு வார்த்தையை எங்கு நடத்துவது என்பது குறித்தும்,பேச்சுவார்த்தைக்கான தேதி குறித்தும் இலங்கை அரசு அறிவிக்கும் என்றுஅமைச்சரவை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அநேகமாக மேற்கத்தியநாடுகளில்தான் பேச்சு வார்த்தை நடக்கும். வியாழக்கிழமைநடைபெறவிருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் பேச்சுவார்த்தையில் இலங்கை சார்பில்பங்கு பெறும் பிரதிநிதிகளின் பெயர்கள் முடிவு செய்யப்படும்..
சென்ற வாரம் இலங்கை அதிபருடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்த விவரத்தைவிடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டான் பாலசிங்கத்தை லண்டனில்சந்தித்த எரிக் சொல்ஹாம் தெரிவித்தார்.
பாலசிங்கம் கூறிய கருத்துக்களை சொல்ஹாம் சந்திகரிகாவிடம் தெரிவிப்பார்.இலங்கை அரசுக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இந்தமாதம் 15ம் தேதி துவங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றனர்.
அமைதிப் பேச்சுவார்த்தையின் போது சண்டை நிறுத்தம் வேண்டும் என புலிகள் கோரிவருவதும், சண்டை தொடர்ந்து நடக்கும் என இலங்கை அரசு வலியுறுத்தி கூறிவருவதும், நார்வே குழுவின் அமைதி பேச்சுவார்த்தை முயற்சிக்கு தடையாக இருந்துவருகிறது.
விடுதலை புலிகள் தாங்கள் அறிவித்திருந்த 4 மாத சண்டை நிறுத்தத்தை வாபஸ் பெற்றபின்பு தொடர்ந்த சண்டையில் இலங்கை ராணுவ வீரர்கள் 450 பேர் கொல்லப்பட்டனர்.100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
அமைதி பேச்சுவார்த்தைக்காக சண்டை நிறுத்தம் அறிவிக்க முடியாது என கூறிவந்தஇலங்கை அரசு, தற்போது தனது அந்த முடிவில் மிகவும் உறுதியாக இருக்கிறது.
விடுதலை புலிகளுக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை நீக்கப்படவேண்டும் என்பது குறித்த பல விஷயங்கள் பேச்சுவார்த்தைக்கு தடையாகஇருந்தாலும், புலிகள் சண்டை நிறுத்தம் கோரிவருவதுதான் முக்கியமான தடையாகஇருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இலங்கையில் ஊர்வலத்திற்கு தடை:
இந்நிலையில், இலங்கையில் ஒரு வாரத்திற்கு எந்த விதமான ஊர்வலமும்,பொதுக்கூட்டமும் நடத்தக்கூடாது என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதுஅவசரகால நடவடிக்கையாக எடுக்கப்படுகிறது.
சிங்கள அமைப்பான சிங்கள உருமாயா என்ற அமைப்பு முஸ்லிம்ளுக்கு எதிரானநடவடிக்கைகளில் வியாழக்கிழமை ஈடுபடும் என அறிவித்திருதந்ததை தொடர்ந்துஇந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தமாதம் 1ம் தேதி மாவென்னாவில் நடந்த வன்முறை சம்பவத்தின் போதுசேதமடைந்த சிங்களர்களின் உடைமைகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் எனகோரி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர் என தெரியவந்துள்ளது.
எந்த விதமான அசம்பாவிதமும் நடக்காமல் இருப்பதற்காக முன்னெச்செகித்கைநடவடிக்கையாக இலங்கை அரசு ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்களை தடைசெய்துள்ளது.