தஞ்சை சிறையிலிருந்து 8 கைதிகள் தப்பி ஓட்டம்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் சிறுவர் சிறையிலிருந்து 8 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர்.
தஞ்சாவூர் சச்சிதானந்த மூப்பனார் ரோட்டில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. திருட்டு வழக்குகளில்சம்பந்தப்பட்ட சிறுவர்கள் இங்கு கைதிகளாக அடைக்கப்படுவர்.
இங்கு அடைக்கப்பட்டிருந்த ரமேஷ், செல்வராஜ், பிரபு செல்வன், பிரபு, கோபி, வினோத் குமார், சுரேஷ், ரமேஷ்ஆகிய 8 பேரும் ஜெயில் கம்பியை வளைத்து, சுவர் ஏறிக் குதித்து தப்பித்து தப்பியோடி விட்டனர்.
இதுகுறித்து சீர்திருத்தப்பள்ளி அதிகாரி அளித்த புகாரை அடுத்து, தஞ்சை தெற்குக் காவல்நிலையப் போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications