எனது கட்சிக்குத் தோல்வியா? பு.நீ.க. தொண்டர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் தனது கட்சி தோல்வியுற்றதை தாங்க முடியாத வருத்தத்தில் புதிய நீதிக் கட்சியின்தொண்டர் தற்கொலை செய்து கொண்டார்.
திமுக கூட்டணியில் கடைசி நேரத்தில் சேர்ந்த புதிய நீதிக் கட்சி தான் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும்படுதோல்வி கண்டது. அதன் தலைவர் ஏ.சி.சண்முகம் ஆரணி தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார்.
இந்த நிலையில் புதிய நீதிக் கட்சியின் தோல்வியால் மனம் உடைந்தார் ஆரணி விளை கிராமத்தைச் சேர்ந்ததொண்டர் நடேசன். மனம் வெம்பிய அவர் தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் குறித்து அறிந்த கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், விளை கிராமத்திற்குச் சென்று நடேசன் உடலுக்கு மலர்வளையம் அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.












Click it and Unblock the Notifications