மானை சுட்டுக்கொன்ற பாதிரியார் கைது
ஊட்டி:
முதுமலை சரணாலய வனப் பகுதியில் மானைச் சுட்டுக் கொன்ற பெங்களூர் பாதிரியார் கைது செய்யப்பட்டார். அவருக்கு ரூ. 4லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
முதுமலை சரணாலயத்திற்கு அருகில் உள்ள ஒரு தனியார் எஸ்டேட்டில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு புள்ளி மான் ஒன்று சுட்டுக்கொல்லப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை வனத் துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில், இதே எஸ்டேட்டில் மற்றொரு புள்ளி மான் குண்டு பாய்ந்த நிலையில் இறந்து கிடந்தது. இந்த மானையும் வனத்துறையினர் கண்டு பிடித்தனர். இது தொடர்பாக எஸ்ட்ேடை நிர்வகித்து வந்த பெங்களூரைச் சேர்ந்த பாதிரியார் பெர்னாண்டஸ்வீட்டை வனத்துறையினர் சோதனையிட்டனர்.
இந்த சோதனையில் பெர்னாண்டஸ் வீட்டில் இருந்த பிரிட்ஜில் மான் கறி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பெர்னாண்டஸ்உடனடியாகக் கைது செய்யப்பட்டார். மேலும், அவருக்கு ரூ. 4 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தொகையை உடனே அவர் செலுத்தி விட்டார்.
பாதிரியார் பெர்னாண்டசிடம் நடத்திய விசாரணையில் அவரிடம் லைசென்ஸ் இல்லாத நான்கு துப்பாக்கிகள் இருப்பது தெரியவந்தது. இந்த துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாகவும் அவர் விசாரணை செய்யப்பட்டார்.
அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டபோது, அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கூடலூர்அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications