கருணாநிதி மீதான அராஜகம்: ஜனாதிபதி- வாஜ்பாய் ஆலோசனை
டெல்லி:
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியை போலீசார் அடித்து இழுத்துச் செல்லப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஜனாதிபதி கே.ஆர். நாராயணனுடன் பிரதமர் வாஜ்பாய் சனிக்கிழமை மாலை ஆலோசனைநடத்தினார்.
முன்னதாக கருணாநிதிக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து கடும் கோபமடைந்த வாஜ்பாயை தமிழக தலைமைச்செயலாளரை தொலைபேசியில் அழைத்து மிகக் கோபாமாகப் பேசினார்.
கருணாநிதியின் வீட்டில் நடந்த சம்பவங்கள் குறித்து எனக்கு முழு விவரம் அளிக்க வேண்டும். என்னுடன்தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு வைத்திருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
ஆட்சியைக் கலைக்க கோரிக்கை:
மத்தியில் திமுகவின் ஆதரவில் ஆட்சியில் இருக்கும் பாரதீய ஜனதா கட்சி கடும் கோபமடைந்துள்ளது.
ஜெயலலிதாவின் ஆட்சியைக் கலைக்க வேண்டும் எனவும் தீவிர கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், அரசியல்சட்டத்தின் 356வது பிரிவின் கீழ் மாநில அரசின் ஆட்சியைக் கலைத்தால் அது தொடர்பான தீர்மானத்தைநாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்ற வேண்டும்.
ஆனால், ராஜ்யசபாவில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு மெஜாரிட்டி இல்லை. அங்கு அந்த தீர்மானத்தை நிறைவேற்றகாங்கிரஸ் ஆதரவு வேண்டும். ஆனால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணியில் தான் உள்ளது. எனவே,ஜெயலலிதா அரசுக் கலைப்புக்கு காங்கிரஸ் அனுமதி அளிக்காது.
இந் நிலையில் வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயக் கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடந்து வருகிறது.
இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications