கிருஷ்ணகிரியில் பஸ் எரிப்பு
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணரியில் இன்று அதிகாலையில் அரசு பஸ் ஒன்று தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.
திமுக தலைவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சேலத்தில் இருந்து இன்று அதிகாலை கிருஷ்ணகிரிக்கு ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அதிகாலைபுறப்பட்ட இந்த பஸ் கிருஷ்ணகிரி அருகே உள்ள அவதானப் பட்டியில் பஸ்சை ஒரு கும்பல் வழிமறித்தது.
பஸ்சில் இருந்த 34 பயணிகளையும் டிரைவர் கண்டக்டர் அனைவரையும் இறக்கி விட்டனர். பின்னர் அந்த பஸ்சை தீ வைத்துகொளுத்தினர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதே போன்று நாகர்கோயிலிருந்து பெங்களூர் சென்று கொண்டிருந்த ஒரு பஸ்சையும் ஒரு கும்பல் வழிமறித்து பயணிகளைஇறக்கி விட்டு தீ வைத்தது.
அந்த பஸ் முழுமையாக எரிவதற்கு முன், அருகில் இருந்த தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்து விட்டனர்.
இதையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் போலீசார் தீவிரப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications