For Quick Alerts
For Daily Alerts
Just In
வாஜ்பாய் அதிர்ச்சி: தமிழக அரசிடம் விளக்கம் கேட்கிறார்
டெல்லி:
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்ட முறை குறித்து பிரதமர் வாஜ்பாய் கடும் கண்டனம்தெரிவித்துள்ளார்.
கருணாநிதியை போலீசார் அடித்து இழுத்துச் சென்றதை டிவியில் பார்த்த வாஜ்பாய் பெரும் அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக திமுக முக்கியத் தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான டி.ஆர். பாலுவைத் தொடர்புகொண்டு கருணாநிதியின் வீட்டில் என்ன நடந்தது என்று விபரம் கேட்டறிந்தார். பாலு அழுது கொண்ட அங்குநடந்த அராஜகம் குறித்து விளக்கினார்.
இதையடுத்து தமிழக தலைமைச் செயலாளர் சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் வாஜ்பாய்.
கருணாநிதி வீட்டில் தமிழக போலீசார் நடந்து கொண்ட விதம் குறித்து உடனடியாக தனக்கு விவர அறிக்கை தரவேண்டும் என உத்தரவிட்டார்.
Comments
Story first published: Saturday, June 30, 2001, 5:30 [IST]