மும்பையில் சோட்டாராஜனின் தமிழ் கூட்டாளி சுட்டுக்கொலை
Subscribe to Oneindia Tamil
மும்பை:
மும்பை தாதாவான சோட்டாராஜனின் கூட்டாளி ஒருவர் மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் பெயர் ராஜன்நாடார், தமிழகத்தைச் சேர்ந்தவர்.
இந்நிலையில் ராஜன் நாடார் போரிவிலி பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருப்பதாகபோலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்தப் பகுதிக்கு போலீஸ் படை விரைந்தது. ராஜனின் இருப்பிடத்தை நெருங்கிய உதவி போலீஸ்கமிஷனர் அம்படா ஸ்பாடே, சரணடடைந்து விடுமாறு ராஜனுக்கு உத்தரவிட்டார். ஆனால் ராஜன் போலீசாரைநோக்கி சுட ஆரம்பித்தான். இதையடுத்து போலீசாரும் அவனை நோக்கி சுட்டனர்.
இந்த துப்பாக்கிச் சண்டையில் ராஜன் பலத்த காயமடைந்தான். இதையடுத்து அவனை போலீசார் அருகிலுள்ளமருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே ராஜன் நாடார் இறந்துவிட்டான்.












Click it and Unblock the Notifications