For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வங்கியில் ஒலி எழுப்பிய எலி... சென்னையில் பரபரப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையிலுள்ள வங்கியொன்றில் அபாய மணிக்குச் செல்லும் வயர்களுக்குள் ஒரு எலி சிக்கிக் கொண்டதால்பெரும் குழப்பம் ஏற்பட்டது.

சென்னையிலுள்ள பேங்க் ஆப் பரோடாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு அபாய மணி ஒலித்தது.அந்தப்பகுதியில் ரோந்துபோய்க் கொண்டிருந்த போலீஸார் இதைக் கேட்டுத் திடுக்கிட்டனர்.

உடனடியாக, வங்கிக்குள் திருடர்கள் இருக்கிறார்களா என்று பார்த்தனர். ஆனால் யாரும் இருப்பதாகத்தெரியவில்லை.

இதைத் தொடர்ந்து வங்கி மேலாலருக்கு தகவல் பறந்தது. அவரும் ஓடோடி வந்தார். கதவைத் திறந்து வங்கிக்குள்நுழைந்து பார்த்தபோது, அனைவரும் அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

காரணம் - ஒரு எலி. அபாய மணிக்குச் செல்லும் வயர்களுக்குள் அந்த எலி சிக்கிக் கொண்டிருந்தது. இதனால்அபாய மணி தொடர்ந்து ஒலித்துள்ளது. பின்னர் போலீஸார் எலியை அங்கிருந்து விரட்டி வெளியேற்றினர். அதன்பிறகே மணியோசை நின்றது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X