விஷச் சாராயம்... ஆபத்து கட்டத்தைத் தாண்டிய 50 பேர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விஷச்சாராயம் குடித்து சென்னை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 50 பேரின் உடல் நிலைஆபத்து கட்டத்தைத் தாண்டி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை புறநகரான புழல் அருகே உள்ள கோட்டூர் காலனியைச் சேர்ந்த பலர் திருமண நிச்சயதார்த்தத்தின்போதுகள்ளச்சாராயம் குடித்தனர்.
அவர்களில் 36 பேர் பரிதாபமாக இறந்தனர். இன்னும் 50 பேர் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 50 பேரின் நிலையும் பரவாயில்லை என்றும் அவர்கள் ஆபத்தானநிலையில் இல்லை என்றும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications