சாலை விபத்தில் 2 அய்யப்ப பக்தர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் சென்னையைச் சேர்ந்த 2 அய்யப்ப பக்தர்கள் பலியாயினர்.
சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலை போட்டு அங்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்துசென்னை திரும்பிக் கொண்டிருந்தனர்.
சமயபுரம் அருகே கூத்தூர் என்ற இடத்தில் அவர்கள் பயணம் செய்த வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில்,சென்னையிலிருந்து வந்த அரசு பஸ் வேன் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 2 பேர் பலியாயினர். 4 பேருக்குக் காயம் ஏற்பட்டது. அவர்கள் திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம்அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications