நக்கீரன் நிருபர் கைது: சி.பி.ஐ. விசாரணைக்குக் கோரிக்கை
சென்னை:
நக்கீரன் நிருபர் சிவசுப்ரமணியத்தை கைது செய்த விதம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று,கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலின்போது அரசுத் தூதர்களாக சென்ற பாண்டிச்சேரியைச் சேர்ந்த பேராசிரியர்கல்யாணி மற்றும் சுகுமாறன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் இருவரும் விடுத்துள்ள கூட்டறிக்கையில், தமிழக மற்றும் கர்நாடக மாநில அரசுகள்அங்கீகரித்த பின்பே அரசுத் தூதராக சிவசுப்ரமணியன் காட்டுக்குள் போய் வீரப்பனைச் சந்தித்தார்.
இந்த நிலையில் அவர் மீது பொய்யான வழக்குகளை போட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத் தாக்குதலில் சிவசுப்ரமணியத்தை இணைத்திருப்பது கடுமையாககண்டிக்கத்தக்கது.
சிவசுப்ரமணியன் கைது விவகாரத்தை பல்வேறு தரப்பினரும் கண்டித்துள்ளனர். கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர்நீதிமன்ற நீதிபதி கூறுகையில், சிவசுப்ரமணியத்தை தங்களது கஸ்டடிக்கு கோரும் தமிழக போலீஸாரின்உள்நிாேக்கம் குறித்து சந்தேகிப்பதாக பகிரங்கமாக கூறியுள்ளார் என்பதை நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும்.
மத்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றுஅவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications