சேலத்தில் கைதி தப்பிய சம்பவம்: 5 போலீசார் சஸ்பெண்ட்
சேலம்:
சேலத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பட்டப்பகலில் கைதி தப்பிய சம்பவம் தொடர்பாக 5 போலீசார் இடைநீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த ப்ளாலுதீன் என்ற சித்திக் என்ற கைதி சேலம் அரசு மருத்துவமனையில் குடல் இறக்கஅறுவைச் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தான்.
நேற்று பிற்பகல் அங்கு வந்த சித்திக்குடைய கூட்டாளிகள் போலீசாரைத் துப்பாக்கியால் சுட்டும், ஒரு போலீசைக்கத்தியால் குத்தியும் அவனை மீட்டுக் கொண்டு டாடா சுமோ கார் மூலமாக தப்பி விட்டனர்.
சேலம் மட்டுமல்லாமல் தமிழக போலீஸ் வட்டாரத்தையே பரபரப்புக்குள்ளாக்கிய இந்தச் சம்பவத்தில் சர்வதேசபோதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.
சித்திக்கை மீட்டுக் கொண்டு செல்வதற்காக 6 பேர் வந்துள்ளதாகத் தெரிகிறது. தப்பியோடியவர்களைத் தேடிதமிழகம் முழுவதும் போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
தப்பியோடியவர்கள் தவற விட்டுச் சென்ற செல்போன் மூலம் பல முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளனஎன்று போலீசார் தெரிவித்தனர்.
சேலம் அருகேயுள்ள கொல்லிமலையில் வைத்துதான் சித்திக்கின் கூட்டாளிகள் அவனை மீட்டுச் செல்வதற்கானதிட்டத்தைத் தீட்டியதும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே சித்திக்கைத் தப்பவிட்ட 5 போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications