மாலத்தீவு கடற்படையினரால் கைதான 10 குமரி மீனவர்கள் விடுதலை

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:

மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் விடுதலைசெய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர், மார்த்தாண்டம் துறை மற்றும் புதூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த 11 மீனவர்கள்கடந்த ஜனவரி 2ம் தேதி மீன் பிடிப்பதற்காகக் கடலுக்குச் சென்றனர்.

ஆனால் அவர்கள் இந்தியக் கடல் எல்லையைத் தாண்டி மாலத்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்ததால் அந்நாட்டுகடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டனர்.

இம்மீனவர்களை மீட்பதற்காக உயர் அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். அதன் விளைவாகசுனில் என்ற மீனவரைத் தவிர 10 மீனவர்களை மாலத்தீவு அரசு விடுதலை செய்து விட்டது.

இந்த 10 மீனவர்களும் விமானம் மூலம் நேற்று திருவனந்தபுரம் வந்து சேர்ந்தனர். அவர்களை மீன்வளத்துறைஅதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர் அவர்கள் திருவனந்தபுரத்திலிருந்து அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+