மலிவு விலை மதுவுக்கு "குட்-பை": "பார்"களைத் தொடங்க அரசு முடிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மலிவு விலை மது திட்டத்தை வரும் ஏப்ரல் 14 முதல் கைவிடப் போவதாக தமிழக அரசு இன்று (புதன்கிழமை)அறிவித்துள்ளது.
இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின்போது, நிதி அமைச்சர் பொன்னையன் இதை அறிவித்தார்.
தொடங்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறாததால் இத்திட்டத்தைக் கைவிடப் போவதாகப் பொன்னையன்அறிவித்தார். அதன்படி வரும் ஏப்ரல் 14ம் தேதி முதல் மலிவு விலை மது விற்கப்படாது என்றும் பொன்னையன்கூறினார்.
கடந்த வாரம்தான் மலிவு விலை மதுவின் விலை ரூ.15லிருந்து ரூ.18ஆக உயர்த்தப்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே மதுக் கடைகளில் மீண்டும் "பார்"களைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மாநகராட்சி,நகராட்சி மற்றும் டவுன் பஞ்சாயத்துக்களில் இத்தகைய "பார்"கள் திறக்கப்படும் என்று பொன்னையன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications