போடுங்கம்மா ஓட்டு: வாணியம்பாடியில் சிறப்பு பூஜையுடன் ஜெ. பிரசாரம்
சென்னை:
சட்டசபை இடைத் தேர்தலுக்கான பிரசாரத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கினார்.
இதற்காக நேற்றிரவு அவர் சென்னையிலிருந்து வாணியம்பாடிக்குப் புறப்பட்டார்.
ஆரணியில் படவேடு அம்மன் கோவிலில் சிறப்புப் பூஜையுடன் தனது பிரச்சாரத்தை இன்று அவர் துவக்கினார்.
சைதாப்பேட்டை, வாணியம்பாடி, அச்சிரபாக்கம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் வருகிற 31ம் தேதி தேர்தல் நட்ைபெறவுள்ளது.இதில் அனைத்துத் தொகுதிகளிலும் 4 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
வாணியம்பாடியில் அதிமுகவின் தேர்தல் பிரசாரத்தை விறுவிறுப்பாக்குவதற்காக கட்சியின் பொதுச் செயலாளரும்,முதல்வருமான ஜெயலலிதா நேற்று இரவு 7 மணிக்கு கார் மூலம் புறப்பட்டுச் சென்றார்.
நேராக வேலூர் விருந்தினர் மாளிக்ைகுச் சென்ற அவர் இரவில் அங்கு ஓய்வெடுத்தார். இன்று காலை ஆரணியில் உள்ள படவேடுரேணுகாம்பாள் கோவிலுக்குச் சென்றார்.. அங்கு சிறப்புப் பூஜைகளில் கலந்து கொண்டார்.
இதன் பின்னர் வாணியம்பாடி தொகுதிக்கு உட்பட்ட கோவிந்தாபுரத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தனது பிரசாரத்தை அவர்துவக்கினார். வாணயம்பாடியில் வரும் 20ம் தேதி வரை அவர் தீவிர பிரச்சாரம் செய்வார்.
ஜெயலலிதாவின் வருகையையோட்டி கோவிலுக்குச் செல்லும் சாலைக்கு மேக்-அப் போடப்பட்டுள்ளது. அவசரஅடியாகதாரைக் கொட்டியுள்ளார்கள். ஜெயலலிதா வந்து சென்ற பின் ஒரு மாத்ததில் அந்த ரோடு பழைய கரடுமுரடுநிலைக்கு வந்துவிடும்.
மூன்று நாட்கள் ஜெயலலிதா தங்கியிருப்பதற்காக வேலூர் அரசு விருந்தினர் மாளிகை புதுப்பிக்கப்பட்டுள்ளது.வேலூர் நகரில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்ள்ளது.
இந்த கோவில் பூஜை, யானை தானம் இதற்கெல்லாம் இன்சார்ஜ் அறநிலையத்துறை அமைச்சர் ராமசாமி தான். அவர் இங்கு கடந்தஇரு நாட்களாக தங்கியிருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்.
வாணியம்பாடியில் பிரசாரத்தை முடித்து விட்டு அச்சிரபாக்கம், அடுத்து சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் அவர் பிரசாரம்செய்கிறார்.
ஒவ்வொரு தொகுதிதியிலும் 3 நாட்களுக்கு பிரசாரம் செய்கிறார். சைதை தொகுதியில் நடிகர் ராதாரவியை ஆதரித்துகாலையிலும், மாலையிலும் பிரசாரம் செய்யவுள்ளார். சைதை தொகுதியில் ஜெயலலிதா பிரசாரம் செய்யப் போவது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவின் கோட்டையான அந்தத் தொகுதிப்பக்கம் இதுவரை ஜெயலலிதா எந்தத் தேர்தலிலும் பிரச்சாரம் செய்ததில்லை.
-
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
செய்யாறு தொகுதியின் தவெக வேட்பாளரானார் தூசி.கே.மோகன்! எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம்












Click it and Unblock the Notifications