For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மருத்துவமனையில் தாமரைக்கனி

By Staff
Google Oneindia Tamil News

ஸ்ரீவில்லிபுத்தூர்:

அதிமுக தொண்டரைத் தாக்கியது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித் தலைவரும்முன்னாள் எம்.எல்.ஏவுமான தாமரைக்கனி உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தாமரைக்கனியின் மகனும் தற்போதைய ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்.எல்.ஏவுமான இன்பத்தமிழன், நகராட்சிவளாகத்திற்குள் வந்து பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றது தொடர்பாக சமீபத்தில் இருவருக்கும் இடையேகடும் மோதல் ஏற்பட்டது.

இம்மோதலின் போது தாமரைக்கனிக்கு ஆதரவாகப் பேசிய அவருடைய மற்றொரு மகனாகிய தங்கமாங்கனியைஇன்பத்தமிழன் ஆதரவாளர்கள் பயங்கரமாகத் தாக்கியதில் அவருக்கு பலத்த கத்திக்குத்துக் காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் இன்பத்தமிழனின் வற்புறுத்தலுக்கிணங்க தாமரைக்கனி கடந்த புதன்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டார். அதிமுக தொண்டரான ஜெயக்குமார் என்பவரை தாமரைக்கனி கொலை செய்ய முயன்றதாகப்புகார் கூறப்பட்டது. பின்னர் அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்உத்தரவிட்டது.

இதற்கிடையே காவலில் வைக்கப்பட்டிருந்த தாமரைக்கனிக்கு நேற்று திடீரென்று உடல் நலக் குறைவு ஏற்பட்டது.இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அப்போது நிருபர்களிடம் பேசிய தாமரைக்கனி தன் மகன் இன்பத்தமிழனைப் பற்றி ஏராளமான புகார்களைக்கூறினார்.

தங்கமாங்கனியைக் கத்தியால் குத்திய இன்பத்தமிழனை மட்டும் ஏன் போலீசார் கைது செய்யவில்லை என்றுஆத்திரத்துடன் கேட்டார் தாமரைக்கனி.

அதிமுகவிலிருந்து பிரிந்து வந்து திமுகவில் சேர்ந்த பிறகு தாமரைக்கனிக்கு பல்வேறு வகைகளிலும் தமிழக அரசுநெருக்கடி அளித்து வருகிறது. இவ்விஷயத்தில் இன்பத்தமிழனின் பல்வேறு நடவடிக்கைகளுக்கும் முதல்வர்ஜெயலலிதா ஆதரவாக உள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X