சிறுமிகளை கடத்தி பிச்சைக்காரிகளாக்கிய கும்பல்
சென்னை தஞ்சாவூர்:
சென்னையிலிருந்து கடத்தப்பட்டு கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் கோவில்களில் பிச்சை எடுக்க வைக்கப்பட்ட 2 மாணவிகள் தப்பி வந்தனர்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அருகே உள்ள சண்முகராயன் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் வங்கி அதிகாரியாக உள்ளார்.இவரது மகள்கள் பிரியா, கவிதா ஆகியோர் மண்ணடியில் ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர்.
இருவரும் திங்கள்கிழமை காலை பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது ஒரு வேனில் வந்தவர்கள் உங்களது அப்பா வேனில்அடிபட்டு விட்டார். மருத்துவமனைக்கு வாருங்கள் என்றனர்.
இதைக் கேட்டதும் பதறிப் போன இரு மாணவிகளும் வேனில் ஏறினர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்வதற்குப் பதில் வேன் நேராகசென்னையை விட்டு வெளியே வந்தது.
இதனால் மாணவிகள் வேனை நிறுத்துமாறு அலறினர். ஆனால் வேனில் இருந்தவர்கள் கொலை செய்து விடுவோம் என்றுமிரட்டியதையடுத்து அமைதியாகி விட்டனர்.
இந்த இருவரும் கும்பகோணத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ஒரு கோவில் முன் வேனை நிறுத்தி இரு மாணவிகளையும் கீழேஇறக்கியது அந்தக் கும்பல். அங்கு மாணவிகளை பிச்சை எடுக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.
பின்னர் இருவரையும் ஏற்றிக் கொண்டு தஞ்சாவூர் கொண்டு சென்றனர். அங்குள்ள பெரிய கோவில் முன் பிச்சை எடுக்க வைத்துள்ளனர்.அப்போது கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி இரு மாணவிகளும் அங்கிருந்து தப்பி வந்துவிட்டனர்.
தஞ்சாவூர் பஸ் நிலையம் வந்த அவர்கள் அழுதுகொண்டே என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துள்ளனர். அப்போது அங்கு ரோந்துவந்த போலீஸாரை அணுகி நடந்தததைக் கூறியுள்ளனர். இதையடுத்து இருவரையும் போலீஸார் காவல் நிலையத்திற்கு கூட்டிச் சென்றனர்.
அங்கிருந்து மாணவிகளின் வீட்டிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சண்முகம் தம்பதியினர் உடனடியாக தஞ்சாவூர் சென்று இருமகள்களையும் மீட்டனர்.












Click it and Unblock the Notifications