ராமேஸ்வரம் மீனவர்களின் 20 படகுகள் இலங்கையில் சிறைபிடிப்பு
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 20 மீன் பிடி படகுகளை இலங்கைக் கடற்படையினர் பிடித்துவைத்துள்ளதைக் கண்டித்து ராமேஸ்வரம் பகுதியில் மீனவர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
ராமேஸ்வரம் அருகே உள்ள ஓலைக்குடா என்ற கிராமத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 20 மீன் பிடி நாட்டுப்படகுகளை தலைமன்னார் அருகே வளைத்துப் பிடித்த இலங்கைக் கடற்படையினர் அவற்றை சிறைவைத்துள்ளனர்.
இத்தகவல் ஓலைக்குடாவிற்குப் பரவியதும் அவர்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், விசைப் படகு உமையாளர்களால் தங்களுக்கு எப்போதும் பிரச்சினை ஏற்படுவதாகவும், மீன் பிடிப்பதுதொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி அவர்கள் நடந்து கொள்வதாகவும், தங்களது மீன்பிடிக்கும் வலைகளை அவர்கள் அடிக்கடி அறுத்து விடுவதாகவும் மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.
அரசு தலையிட்டு இந்தப் பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் அம்மீனவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.
-->