தொடங்கியது இறுதிக் கட்ட காஷ்மீர் தேர்தல்: தீவிரவாதிகள் சுட்டு 2 ரிசர்வ் போலீசார் பலி
காஷ்மீர்:
காஷ்மீரில் இன்று காலை நான்காவது மற்றும் இறுதிக் கட்டத் தேர்தல் தொடங்கிய நிலையில், தோடா நகரில்உள்ள ஒரு வாக்குச் சாவடி மீது தீவிரவாதிகள் பயங்கரத் தாக்குதல் நடத்தியதில் 2 பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தோடா மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டசபைத் தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தேர்தல் தொடங்கியது.
காஷ்மீரிலேயே இங்கு தான் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகம் என்பதால் தோடா மாவட்டத்தில் வரலாறுகாணாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 18,000 பாதுகாப்புப் படையினர்குவிக்கப்பட்டிருந்தனர்.
தோடா நகரிலும் ஏராளமான மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் தேர்தல் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தோடா நகரில் உள்ள ஒரு வாக்குச் சாவடிக்கு போலீஸ்சீருடையில் வந்த இரண்டு தீவிரவாதிகளில் ஒருவன், கையோடு கொண்டு வந்திருந்த ஒரு கிரனைட் குண்டைவாக்குச் சாவடிக்குள் வீசி எறிந்தான்.
பின்னர் சற்றும் தாமதிக்காமல் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீசாரை நோக்கிஇரண்டு தீவிரவாதிகளும் சராமாரியாகத் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.
இந்தத் தாக்குதலால் சிறிது தடுமாறிய போலீசார் உடனடியாகப் பதிலடித் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரம் வரை துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதில் ஒரு மத்திய ரிசர்வ் போலீஸ்காரரும், ஒரு தீவிரவாதியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். குண்டுக் காயமடைந்தநான்கு போலீசாரில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மற்றொரு தீவிரவாதி தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் அங்கிருந்து தப்பியோடி விட்டான். இந்த இரண்டுதீவிரவாதிகளும் பாகிஸ்தானின் லஷ்கர்-ஏ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் என்றுதெரிய வந்துள்ளது.
இந்தச் சம்பவத்தால் அந்த வாக்குச் சாவடியில் சிறிது நேரம் வாக்குப் பதிவு தடைபட்டது. பின்னர் காலை 9 மணிக்குமேல் மீண்டும் வாக்குப் பதிவு தொடர்ந்து நடைபெற்றது.
இதற்கிடையே தோடா மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் தேர்தல் அமைதியாக நடந்து வருகிறது.
-->
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications