For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரம்பலூர் அருகே நவராத்திரி திருவிழாவில் பட்டாசு விபத்து

By Staff
Google Oneindia Tamil News

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் துங்காபுரம் கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவில் பட்டாசுகள் வெடித்து 20 பேர்காயமடைந்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துங்காபுரத்தில் நவராத்திரி விழா நடந்து வந்தது. சரஸ்வதி பூஜை தினமானதிங்கள்கிழமையும் அந்தக் கோவிலில் திருவிழா சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.

அப்போது ஒரு இடத்தில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென்று சராமாரியாக வெடித்துச் சிதறியதில் 15சிறுவர்கள் உள்பட 20 பேர் காயமடைந்தனர்.

கோவிலுக்கு அருகே வெடிக்காமல் கிடந்த பட்டாசுகள் திடீரென்று வெடித்ததால் தான் இந்த விபத்து நேர்ந்ததாககூறப்படுகிறது. இருப்பினும் சதி வேலை காரணமாக இது நடந்திருக்கலாமோ என்ற சந்தேகமும் கிளம்பியுள்ளது.

காயமடைந்தவர்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 6 பேர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டனர். மற்றவர்கள் அரியலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X