குமரி-டெல்லி இடையே "திருக்குறள் எக்ஸ்பிரஸ்" ஓடத் தொடங்கியது
நாகர்கோவில்:
கன்னியாகுமரி - டெல்லி நிஜாமுதீன் இடையிலான "திருக்குறள் எக்ஸ்பிரஸ்" ரயிலை மத்திய ரயில்வே இணைஅமைச்சர் ஏ.கே. மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வாராந்திர ரயிலான இது கன்னியாகுமரியிலிருந்து ஒவ்வொரு புதன்கிழமையும் டெல்லி புறப்பட்டுச் செல்லும். மறுமார்க்கத்தில் டெல்லியிலிருந்து சனிக்கிழமை தோறும் புறப்பட்டு வரும்.
நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழியாக டெல்லி செல்லும் இந்த ரயிலின் அனைத்துப்பெட்டிகளிலும் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் திருக்குறள் எழுதப்பட்டிருக்கும்.
இந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் மற்றொரு சிறப்பு அம்சமும் உண்டு. அதாவது இந்த ரயிலில் குழந்தைகள் தூங்குவதற்குதொட்டில்களும் உண்டு.
இந்த ரயிலை கன்னியாகுமரியில் மூர்த்தி திங்கள்கிழமை மாலை தொடங்கி வைத்தார். பின்னர் அவர்செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கன்னியாகுமரியிலிருந்து தமிழகத்தின் சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் புதிய ரயில் விரைவில்அறிமுகப்படுத்தப்படும்.
தமிழகத்தில் 62 ரயில்வே பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன என்றார் மூர்த்தி.