அரசியல் பழிவாங்கல்: திமுக
சென்னை:
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகனின் வீடுகளில்லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியுள்ளதாக அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் ஸ்டாலின் கூறினார்.
சென்னை-கோட்டூர்புரத்தில் இன்று சோதனையிடப்பட்ட துரைமுருகனின் வீட்டுக்குச் சென்றார் ஸ்டாலின்.மற்றொரு முன்னாள் அமைச்சரான வீரபாண்டி ஆறுமுகமும் துரைமுருகனின் வீட்டைப் பார்வையிட்டார்.
பின்னர் நிருபர்களிடம் ஸ்டாலின் பேசுகையில்,
கடந்த ஆண்டு பதவியேற்றதிலிருந்தே பழி வாங்கும் நடவடிக்கையை ஆரம்பித்து விட்டது.
அதிலும் திமுகவினரைக் குறி வைத்து தான் அதிமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்துவிடுகிறது.
இந்த மிரட்டல்களுக்கெல்லாம் நாங்கள் பயந்துவிட மாட்டோம். எதையும் சந்திப்பதற்குத் தயாராகத் தான்இருக்கிறோம் என்றார் ஸ்டாலின்.
போலீஸ் ஜீப்பை தாக்க முயன்ற திமுகவினர்
இதற்கிடையே காட்பாடியில் துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்திய காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தமுயன்ற திமுகவினரை போலீஸார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
போலீசார் சோதனை செய்வது குறித்த தகவல் கிடைத்தவுடன் முன்னாள் வேலூர் மாவட்ட திமுக செயலாளர்முகம்மது சகி தலைமையில் ஏராளமான திமுக தொண்டர்கள் துரைமுருகனின் வீட்டின் முன்பாகக் கூடினர்.
சோதனையை முடித்து விட்டு ஒரு பிரிவு போலீஸார் வெளியே வந்து ஜீப்பில் ஏறிய போது, திமுகவினரில் சிலர்அதிமுக, முதல்வர் ஜெயலலிதா மற்றும் காவல்துறையினருக்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.
பின்னர் போலீஸாரின் ஜீப்பை அவர்கள் மறித்தனர். சிலர் ஜீப்பைத் தாக்கவும் முயன்றனர். இதையடுத்து போலீஸார்லேசான தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர்.












Click it and Unblock the Notifications