நீதிமன்றத்தை வாழ்த்தி பார்சலில் வந்த துப்பாக்கி குண்டு
சென்னை:
"நீதிமன்றம் வாழ்க", "போலி டாக்டர்களைப் பிடியுங்கள்" என்று முன்னுக்குப் பின் முரணான வாசகங்கள் கொண்டகடிதத்துடன் ஒரு துப்பாக்கிக் குண்டும் சென்னை நீதிபதிக்கு பார்சலில் வந்தது. இந்த பார்சல் கடிதத்தை அனுப்பியதுயார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மத்திய நிர்வாகத் தீர்ப்பாய நீதிமன்றத்தின் துணைத் தலைவரானநீதிபதி எஸ்.எஸ். சுப்பிரமணியத்துக்கு சமீபத்தில் ஒரு பார்சல் கடிதம் வந்தது.
அதைப் பிரித்துப் பார்த்தபோது ஒரு வெடித்த துப்பாக்கிக் குண்டு, இரும்புத் துண்டு, எரிந்துபோன தீக்குச்சிகள்அடங்கிய ஒரு தீப்பெட்டி ஆகியவை இருந்தன.
இதைப் பார்த்த நீதிபதி சுப்பிரமணியம் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தார். அந்தப் பார்சலில் ஒரு கடிதமும்இருந்தது. மூன்று பக்கங்களுக்கு அக்கடிதம் எழுதப்பட்டிருந்தது.
ஆனால் அந்தக் கடிதத்தில் நீதிபதியை மிரட்டும் வாசகங்கள் எதுவும் இல்லை. "நீதிமன்றம் வாழ்க", "போலிடாக்டர்களைப் பிடியுங்கள்", "என்னைப் பற்றி வடசென்னை மக்கள் எல்லோருக்கும் தெரியும்" என்பது போன்றஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வாசகங்கள்தான் அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தன.
நீதிபதி சுப்பிரமணியம் உடனடியாக அந்தக் கடிதத்தைப் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
மிகவும் வேடிக்கையான இந்தக் கடிதத்தையும், துப்பாக்கிக் குண்டு உள்ளிட்ட பொருட்களையும் யார்அனுப்பியிருப்பார்கள் என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
யாராவது மன நோயாளிதான் இந்தக் கடிதத்தை அனுப்பியிருக்கக் கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இருந்தாலும் நீதிபதிக்கு இந்தக் கடிதம் வந்திருப்பதால் சென்னை உயர் நீதிமன்றப் போலீசார் மிகவும் தீவிரமாகஇதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
-->
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications