காங்கிரசை திருப்திப்படுத்த திமுக முயற்சி: பா.ஜ.க. புகார்
திருத்தணி:
காங்கிரஸ் கட்சியைத் திருப்திப்படுத்துவதற்காகவே இந்து விரோத கோஷங்களை திமுக எழுப்பி வருகிறது என்றுபிரபல நடிகையும் பா.ஜ.க. மகளிரணியின் துணைத் தலைவருமான விஜயசாந்தி கூறினார்.
திருத்தணி அருகே பள்ளிப்பட்டில் நடந்த "இந்திரம்மா" திரைப்பட ஷூட்டிங்கில் கலந்து கொண்ட விஜயசாந்திநிருபர்களிடம் கூறுகையில்,
தமிழக முதல்வர் ஜெயலலிதா இங்கு சிறப்பான ஆட்சி செய்து வருகிறார். மக்கள் பயன்பெறும் வகையில் பல நல்லதிட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மத்திய அரசில் இருந்து கொண்டே பா.ஜ.கவை திமுக எதிர்ப்பது கேலிக்குரியது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில்காங்கிரஸ் கட்சிதான் ஜெயிக்கும் என்று திமுக தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறது.
காங்கிரசைத் திருப்திப்படுத்துவதற்காகவே குங்குமம் வைப்பவர்களைக் கிண்டல் செய்வதும், இந்துக்களைத்திருடன் என்று சொல்லியும் வருகிறது திமுக.
குஜராத்தில் நடந்து முடிந்த தேர்தல் திமுகவின் கண்களைத் திறந்து விட்டது. எனவேதான் பா.ஜ.கவை விட்டுஅக்கட்சியை விலக்க சதி நடப்பதாக சில ஒரு மாயை ஏற்படுத்தி வருகின்றனர் என்றார் விஜயசாந்தி.
-->












Click it and Unblock the Notifications