இந்து இளைஞர்களுக்காக இயக்கம் ஆரம்பிக்கிறது வி.எச்.பி.
சென்னை:
இந்து இளைஞர்களை ஒருங்கிணைக்கும் வகையில் புதிய இளைஞர் இயக்கம் ஒன்றை ஆரம்பிக்கப் போவதாக விஸ்வ இந்துபரிஷத் கூறியுள்ளது.
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச துணைத் தலைவர் வேதாந்தம் இந்தத் தகவலைத் தெவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அரசியல் சார்பற்ற இயக்கமாக இது இருக்கும். இந்து இளைஞர்களுக்குஅவர்களின் பெருமைகள், சக்திகளை விளக்கி இந்து மதத்தின் பால் அவர்களுக்கு ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையில் இந்தபுதிய இளைஞர் இயக்கம் செயல்படும்.
இயக்கம் ஆரம்பிப்பது தொடர்பான முன்னோட்டமாக திருச்சியில் வருகிற 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மாநாடு நடத்தப்படும்.
தமிழகத்தில் இதுவரை 5,000 இளைஞர்கள் இந்த அமைப்பில் சேர தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சரியான தலைமை இல்லாமல்,நமது இளைஞர்கள் அரசியல்வாதிகளின் கைகளிலும், ஜாதிகளுக்கும் அடிமைகளாகி விடுகிறார்கள். அதைப் போக்க வேண்டியகடமை வி.எச்.பிக்கு உள்ளது என்றார் அவர்.
-->