பாமக எம்.எல்.ஏ.முருகவேல்ராஜன் மதுரையில் கைது
மதுரை:
மதுரையிலிருந்து சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திற்கு பேரணி நடத்த முயன்ற பாட்டாளிமக்கள் கட்சி எம்.எல்.ஏ. முருகவேல்ராஜன் உள்ளிட்ட 130 தலித் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
முருகவேல்ராஜன் நேற்று தனது காரில் திருப்புவனம் அருகே வந்தபோது சிலர் அவரது கார் மீதுதாக்குதல் நடத்தினர். இதில் கார் கண்ணாடி உடைந்தது.
இதையடுத்து இன்று காலை தனது தேவேந்திரகுல இளைஞர்கள் சங்கத் தொண்டர்கள் சிலருடன்மதுரையிலிருந்து திருப்புவனத்திற்கு பாதயாத்திரையாகச் சென்று தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீதுநடவடிக்கை எடுக்கக் கோரி போலீசாரை சந்திக்கக் கிளம்பினார்முருகவேல்ராஜன்.
இதனால் ஜாதி மோதல்கள் நடக்கும் நிலை உருவானதால் போலீஸார் விரைந்து வந்துபாதயாத்திரையாக செல்ல அனுமதியில்லை என்று கூறிமுருகவேல்ராஜனைத் தடுத்து நிறுத்தினர்.
இருப்பினும் தடையை மீறிச் செல்வோம் என்றுமுருகவேல்ராஜன் கூறவே அவரையும் உடன்இருந்தவர்களையும் கைது செய்தனர்.
தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் முருகவேல்ராஜன். ராமதாசுடன் ஏற்பட்ட மோதலையடுத்து பா.ம.கவில்இருந்து ஒதுங்கியே இருந்து வந்த இவரை சமீபத்தில் பேசி சரி செய்து விட்டார் ராமதாஸ்.
தலித்களுக்கு எதிராக அரசு செயல்படுவதாகக் கூறி சட்டசபையிலேயே சட்டையைக் கழற்றிபரபரப்பை ஏற்படுத்தியவர் முருகவேல்ராஜன்.
மதுரையில் இவரது காரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியத்தின்ஆதரவாளர்கள் தாக்கினர். அந்த வழியே வந்த ஜி.கே. வாசனை வரவேற்கக் காத்திருந்தனர்பாலசுப்பிரமணியத்தின் ஆதரவாளர்கள். அப்போது அந்த வழியே சென்ற முருகவேல்ராஜனின் கார்டிரைவர் அதிக சத்தம் தரும் ஏர்-ஹாரனை உபயோகித்தார்.
இதை பாலசுப்பிரமணியத்தின் ஆட்கள் ஆட்சேபிக்க இரு தரப்பினருக்கும் மோதல் வெடித்தது.கடைசியில் முருகவேல்ராஜனை பாலசுப்பிரமணியத்தின் ஆட்கள் தாக்கினர்.
இதையடுத்து பாலசுப்பிரமணியத்தையும் அவரது ஆதரவாளர்களையும் கைது செய்யக் கோரியேமுருகவேல்ராஜன் ஊர்வலம் செல்ல முயன்றார்.
-->












Click it and Unblock the Notifications