திடீர் மழை: நெல்லை மக்கள் மீண்டும் சந்தோஷம்
திருநெல்வேலி:
கோடை வெயிலால் தவித்துக் கொண்டிருந்த திருநெல்வேலி மாவட்ட மக்கள் திடீர் என்று பெய்தகனமழையால் சந்தோஷ மழையில் நனைந்தனர்.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி விட்டது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்லவெயில் அடித்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாகவே வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது.
இந்தச் சூழ்நிலையில் திடீரென்று திருநெல்வேலியில் நல்ல மழை பெய்துள்ளது. லேசான தூறலில்தொடங்கிய இந்த மழை பின்னர் கன மழையாகப் பெய்து கொட்டித் தீர்த்து விட்டது.
இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். வெயிலின் கொடுமையிலிருந்துதற்காலிகமாக தப்பிய சந்தோஷம் அவர்களது முகத்தில் காணப்படுகிறது.
மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதாகத் தகவல்கள்தெரிவிக்கின்றன.
கடந்த மாதத் தொடக்கத்தில்தான் திடீர் மழை பெய்து திருநெல்வேலி மக்களை குளிர்வித்தது என்பதுகுறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications