தேவாலயத்துக்கு தீ வைப்பு: நாகர்கோவில் அருகே பதற்றம்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே கிருஸ்தவ தேவாலயம் தீ வைத்து எரிக்கப்பட்டது.
ஓலைகளாய் வேயப்பட்ட இந்த ஆலயத்துக்கு அடையாளம் தெரியாத சிலர் நேற்றிரவு தீவைத்துவிட்டு ஓடிவிட்டனர். இதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
நாகர்கோவிலை அடுத்த பணவிலை கிராமத்தில் இச் சம்பவம் நடந்தது.
இந்த தேவாலயத்தை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்தன. ஆனால் அதன்அருகில் குடியிருப்பவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில்தான் இந்த சர்ச்சுக்கு யாரோ தீ வைத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர். சர்ச்சுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் நாகர்கோவில் பகுதியில்பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications