For Daily Alerts
Just In
எதிர்ப்புகளை மீறி ஏவுகணையை சோதித்த வட கொரியா
சியோல்:
அமெரிக்காவின் கடும் எதிர்ப்புக்கு இடையே கப்பலைத் தகர்க்கும் நவீன ஏவுகணையை வட கொரியா இன்றுசோதனை செய்தது.
ஜப்பான் கடல் பகுதிக்குள் எந்த கப்பலும் நுழைய வேண்டாம் என கடந்த சனிக்கிழமை வட கொரியா எச்சரித்தது.இதன்மூலம் அது ஏவுகணை சோதனையை நடத்துவது உறுதியானது.
இந்தச் சோதனைகளை நடத்தாமல் தடுக்க வட கொரியாவுக்கு பல முனைகளில் இருந்து அமெரிக்கா நெருக்குதல்தந்தது. தனது பி-52 ரக நீண்ட தூர குண்டுவீச்சு விமானங்களை தென் கொரியாவில் குவித்தது.
ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இன்று தனது ஏவுகணையை வட கொரியா செலுத்தியது.
தங்களை அமெரிக்கா தாக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கு எதிராக படைகளை தயார் செய்து வருவதாகவும்வட கொரியா கூறியுள்ளது. தங்களைத் தாக்குமாறு அமெரிக்காவுக்கு சவாலும் விட்டுள்ளது.
-->
Comments
Story first published: Monday, March 10, 2003, 5:30 [IST]