For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தடையை மீறி லாட்டரிச் சீட்டு விற்ற 3 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தடையை மீறி லாட்டரி டிக்கெட்டுகள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் லாட்டரிச் சீட்டுக்களை விற்க மாநில அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து லாட்டரிச்சீட்டு விற்பனை படுத்து விட்டது.

இந்நிலையில் சென்னை-தண்டையார்பேட்டை பகுதியில் ஒரு நம்பர் லாட்டரிச் சீட்டுக்கள் அதிகஅளவில் விற்கப்படுவதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கண்ணன்,கணேசன், ரவி ஆகிய இரண்டு பேர் ஒரு நம்பர் லாட்டரிச் சீட்டுக்களை விற்பனை செய்துகொண்டிருந்தது தெரிய வந்தது.

அவர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள லாட்டரிச்சீட்டுக்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X