தமிழக போலீசில் "கறுப்பு ஆடுகள்": டி.ஜி.பி. எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கள்ளச் சாராயத்தை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரில சில "கறுப்பு ஆடுகளும்" உள்ளதாகவும் இவர்கள்கள்ளச் சாராய கும்பலுக்கு உடந்தையாக இருப்பதாகவும் தமிழக டி.ஜி.பி. ராஜகோபாலன் கூறியுள்ளார்.

மதுவிலக்குக் காவல் துறையில் சிறப்பாகப் பணிபுரிந்த போலீசாருக்குப் பரிசு மற்றும் கேடயம் வழங்கும் விழாஇன்று சென்னையில் நடைபெற்றது. பரிசுகளை வழங்கி ராஜகோபாலன் பேசுகையில்,

மதுவிலக்கு போலீசார் கடந்த ஆண்டு மட்டும் 2,96,429 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இவை தொடர்பாக3,747 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

எரிசாராயத்தில் மெத்தனால் கலந்து அதை மதுவாக விற்பது சட்டப்படி குற்றம். அப்படி விற்பவர்கள் மீதுகடுமையான நடவடிக்கையை மதுவிலக்கு போலீசார் எடுக்க வேண்டும். சாராய சாவே தமிழகத்தில் நடக்காதஅளவுக்கு போலீசார் நடந்து கொள்ள வேண்டும்.

மதுவிலக்கு காவல் துறையில் சில "கறுப்பு ஆடுகள்" உள்ளனர். அவர்கள் யார் என்று நான் சொல்ல மாட்டேன்.

போலீசார் கடமை உணர்வுடனும் நாணயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். நான்கு நல்லவற்றை நாம் செய்தால்40 நல்லது நடக்கும். கணக்கு காட்டுவதற்காக பொய் வழக்குகள் போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்ராஜகோபாலன்.

கள்ளச் சாராய ஒழிப்பில் சிறந்த மாவட்டத்திற்கான பரிசை திருநெல்வேலி மாவட்டம் தட்டிச் சென்றது.அம்மாவட்ட எஸ்.பி. சத்தியமூர்த்தி அதற்கான பரிசையும் கேடயத்தையும் ராஜகோபாலனிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

தர்மபுரி மாவட்ட எஸ்.பி. பெரியய்யா இரண்டாவது பரிசுக்கான கேடயத்தைப் பெற்றுக் கொண்டார். மேலும்கள்ளச் சாராய ஒழிப்பில் சிறப்பான பணியாற்றியதற்காக வேலூர் மாவட்ட டி.எஸ்.பி. எபிநேசருக்கு சிறப்புப் பரிசுவழங்கப்பட்டது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+