தப்பியோடிய போதைக் கடத்தல் கைதி இலங்கையில் சிக்கினான்
சேலம்:
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையிலில் அடைக்கப்பட்டு அங்கிருந்து கடந்தஆண்டு தப்பியோடிய பிலாலுதீன் என்ற கைதி இலங்கை போலீஸாரிடம் சிக்கியுள்ளான்.
இலங்கையைச் சேர்ந்த பிலாலுதீன் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்தான். கடந்த 10 ஆண்டுகளுக்குமுன்பு தமிழக போலீஸாரால் பிடிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தான் அவன்.
பின்னர் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டான். அங்கு இருந்தபோது அவனுக்கு திடீர் உடல் நலக் குறைவுஏற்படவே, பலத்த பாதுகாப்புடன் சேலம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான்.
இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி ஒரு கும்பலின் உதவியுடன் மருத்துவமனையிலிருந்து பிலாலுதீன்தப்பினான். அவனைப் பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.
போலீஸாரின் விசாரணையில் பிலாலுதீன் இலங்கைக்குத் தப்பி போய் விட்டது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்துஇலங்கை போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன் பிலாலுதீன் இலங்கை போலீஸாரால் கைது செய்யப்பட்டிருப்பதாகத்தகவல் வந்துள்ளது. விரைவில் அவனை சேலம் கொண்டு வரும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
-->