For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குண்டர்களை விட்டு வசூல் செய்வதா?- நிதி நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

குண்டர்களை விட்டு கடனை வசூல் செய்வது சட்ட விரோதமானது என்று சென்னை உயர் நீதிமன்றம்எச்சரித்துள்ளது.

சென்னையில் உள்ள சோழமண்டலம் நிதி நிறுவனத்திடமிருந்து சிலர் கடன் வாங்கி இருந்தனர். ஆனால் அவர்கள்குறிப்பிட்ட காலத்திற்குள் தங்கள் கடனைத் திரும்பச் செலுத்தவில்லை.

இதையடுத்து அந்த நிதி நிறுவனம் குண்டர்களை ஏவி விட்டு கடன் வாங்கியவர்களின் வீடுகளில் உள்ளபாத்திரங்களையும் வேறு பல பொருள்களையும் அபகரித்துக் கொண்டது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்குஇன்று விசாரணைக்கு வந்தது.

இதை விசாரித்த நீதிபதி கனகராஜ், கொடுத்த கடனை வசூலிப்பதற்காகக் குண்டர்களை ஏவி விடுவது சட்டவிரோதமான செயலாகும். இதற்குக் கடுமையான தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது. குண்டர்களை ஏவிவிட்டு சோழமண்டலம் நிதி நிறுவனம் பொருள்களை அபகரித்துக் கொண்டது தவறானது என்று கண்டித்தார்.

பின்னர் இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்தது.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X