கைதான திமுக எம்.பி. அக்னி ராஜ் மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
நில மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள திமுக ராஜ்ய சபா எம்.பியான அக்னிராஜ் உடல் நலக் குறைவுகாரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மதுரை திருநகர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்தபோது ரூ.1.47 கோடி மோசடிசெய்ததாக அக்னி ராஜ் உள்பட நான்கு பேரைப் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அக்னி ராஜ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று அக்னி ராஜ் கூறவே அவரை மதுரை அரசு மருத்துவமனையில்போலீஸார் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
-->












Click it and Unblock the Notifications