சென்னையில் சார்ஸ் வைரஸ் ஆராய்ச்சி மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ரத்தத்தில் சார்ஸ் வைரஸை கண்டுபிடிக்கும் ஆய்வு மையம் சென்னையில் அமைக்கப்பட உள்ளது.

புனேயில் மட்டுமே இப்போது சார்ஸ் நோயைக் கண்டுபிடிக்கும் வசதி உள்ளது. அங்குள்ள வைரஸ் ஆராய்ச்சிமையத்துக்குத் தான் சார்ஸ் நோயாளிகளின் ரத்த, சளி, சிறுநீர் சாம்பிள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இப்போதுநாடு முழுவதும் கிட்டத்தட்ட 10 பேருக்கு சார்ஸ் இருப்பது உறுதியாகிவிட்டதால் மேலும் 4 இடங்களில் வைரஸ்ஆராய்ச்சி மையங்களை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில் ஒரு மையம் சென்னையில் அமைக்கப்படுகிறது. மேலும் டெல்லி, கொல்கத்தாவிலும் புனேவில் இன்னொருமையமும் அமைக்கப்படவுள்ளன.

சென்னையில் தகவல் மையம்:

சார்ஸ் நோய் தொடர்பான தகவல்களைத் தெரிந்து கொள்வதற்காக சென்னையில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையத்தைதமிழக அரசு தொடங்கியுள்ளது.

தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புப் பிரிவின் சார்பில் இந்தத் தகவல்மையம் அமைக்கப்பட்டுள்ளது.

சார்ஸ் நோய் என்றால் என்ன, அது எப்படிப் பரவுகிறது, எங்கு சோதனை செய்து கொள்ள வேண்டும், எங்கு சிகிச்சை பெறலாம்ஆகியவை உள்ளிட்ட தகவல்களை இந்த மையத்திலிருந்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

044-24335075 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டால் இந்தத் தகவல்களைப் பெறலாம் என்று சுகாதாரத்துறைஅறிவித்துள்ளது.

மேலும், தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டு, சார்ஸ் நோய் தொடர்பானஅனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலூரில் சார்ஸ் நோயாளி இருப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டதால் அந் நகரை மருத்துவ எச்சரிக்கை பட்டியலில் தமிழகஅரசும் மத்திய அரசும் சேர்த்துள்ளன.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+