கேரளாவில் திடீர் பந்த்: தமிழக வாகனங்கள் நிறுத்தம்
கோவை:
கேரளாவில் முழு அடைப்பு நடப்பதால் தமிழக, கேரள மாநலங்களுக்கிடையிலான சாலைப் போக்குவரத்துஅடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 9 பேர்வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து மாநிலம் முழுவதும் முழு அடைப்புக்கு பா.ஜ.க., வி.எச்.பி.ஆகியவை அழைப்பு விடுத்துள்ளன.
பந்துக்கு கம்யூனிஸிட் கட்சிகளின் மறைமபக ஆதரவும் இருப்பதால் அங்கு இயல்பு வாழ்க்கைபாதிக்கப்பட்டுள்ளது. பஸ்கள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இதனால், தமிழகத்திலிருந்து கேரளாவுக்குள் செல்லும் வாகனப் போக்குவரத்தும்பாதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளா செல்லும் வாகனங்கள்களியக்காவிளை வரை மட்டுமே செல்லுகின்றன.
அதேபோல, கோவை மாவட்டம் வழியாக கேரளா செல்லும் வாகனங்கள், வாலையாறு பகுதியோடு திரும்பிவந்துவிடுகின்றன. நூற்றுக்கணக்கான லாரிகள் இந்த இடத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
-->












Click it and Unblock the Notifications