கொப்பரை தேங்காய் ஊழல்: திண்டுக்கல் திமுக பிரமுகர் வீட்டில் ரெய்ட்
திண்டுக்கல்:
திமுக ஆட்சி காலத்தில் நடந்தாகக் கூறப்படும் கொப்பரைத் தேங்காய் ஊழல் தொடர்பாக திண்டுக்கல் மாவட்டகூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.
மேலும் 4 தேங்காய் வியாபாரிகள் வீட்டிலும் ரெய்ட் நடந்தது.
திமுக ஆட்சியின்போது விவசாயிகளிடம் இருந்து பல்கோடி ரூபாய்க்கு தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டது.தேங்காய் அதிக அளவில் உற்பத்தியாகியும் அதற்கு உரிய விலை கிடைக்காததால் ஆயிரக்கணக்கானவிவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இதையடுத்து அந்த விவசாயிகளுக்கு உதவ அரசே தேங்காயை கொள்முதல் செய்ய முன் வந்தது. மாவட்டக்கூட்டுறவு வங்கிகள் மூலம் இந்தத் தேங்காய்களை அரசு வாங்கியது. ஆனால், இதில் தான் பெருமளவில் ஊழல்நடந்ததாகத் தெரிகிறது.
திமுகவினரின் தலையீட்டால் விவசாயிகளிடம் இருந்து தேங்காய் வாங்குவதற்குப் பதிலாக தேங்காய் மண்டிகள்நடத்தி வரும் வியாபாரிகளிடமும், இடைத் தரகர்களிடமும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு தேங்காய்கள்வாங்கப்பட்டன.
இதனால் விவசாயிகளுக்கு உதவ உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தால் விவசாயிகளுக்கு எந்தப் பலனும்கிடைக்காமல் போனது. தேங்காய் மொத்த வியாபாரிகளும் இடைத் தரகர்களும் தான் இதில் லாபமடைந்தனர்.
மேலும் கூட்டுறவு வங்கிகளிலும் இந்தத் தேங்காய் கொள்முதலை வைத்து பணம் சுருட்டப்பட்டது. தேங்காயைகிலோ ரூ. 22.50க்கு வாங்கிவிட்டு கூட்டுறவு வங்கிகளின் கணக்கில் ரூ. 32.50க்கு வாங்கியதாக காட்டப்பட்டன.இதற்கான போலி பில்களும் தயார் செய்யப்பட்டன.
திமுக ஆட்சியின்போதே இந்த விவகாரம் வெடித்தது. ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுக உடனே இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தது.
குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் தான் இந்த ஊழல் பெருமளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் உள்ள காபித் தோட்ட உரிமையாளர்கள் சங்க கூட்டுறவுவங்கியின் முன்னாள் தலைவர் சிவஞானத்தின் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்தினர். இவர்திமுகவைச் சேர்ந்தவராவார்.
இது தவிர தேங்காய் மொத்த வியாபாரிகள் வீட்டிலும் ரெய்ட் நடந்தது. ஆனால், இதில் என்ன பிடிபட்டது என்றவிவரத்தை போலீசார் தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications