நெஞ்சு வலிக்கு மருந்து வயிற்று வலி: சென்னையில் போலி டாக்டர் கைது!
சென்னை:
சென்னையில் 5 ஆண்டு காலமாக டாக்டர் தொழில் பார்த்து வந்த போலி டாக்டர் கைதுசெய்யப்பட்டார். இவர் ஓராண்டு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் படித்தவராவார்.
விழுப்புரத்தைச் சேர்ந்தவர் ராமசேகர். இவர் சென்னை கொருக்குப்பேட்டை, கண்ணதாசன் நகர்ஆகிய பகுதிகளில் வாசு கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனைகள் நடத்தி வந்தார்.
ராமசேகர் எம்.பி.பி.எஸ் என்ற போர்டும் தொங்கவிட்டு அதே பெயரில் லெட்டர் ஹெட்டும் அடித்துவைத்து மருத்துவம் பார்த்து வந்தார். சில நாட்களுக்கு முன் இவரிடம் லட்சுமணன் என்பவர் நெஞ்சுவலியுடன் சிகிச்சைக்காக வந்தார்.
அப்போது ராமசேகர் கொடுத்த மருந்துகளினால் அவரது உடலில் பல்வேறு உபாதைகள் வந்தன.கடும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட அவர் வேறொரு டாக்டரிடம் போனார்.
அப்போது டாக்டர் ராமசேகர் கொடுத்த மருந்துகளை வாங்கிப் பார்த்த ஒரிஜினல் டாக்டர் மிரண்டுபோனார். நெஞ்சு வலிக்கு சம்பந்தமே இல்லாத மருந்துகளை அவர் எழுதித் தந்திருந்தார்.
ராமசேகர் குறித்து தனது சந்தேகத்தை அந்த டாக்டர் வெளிப்படுத்த உடனே லட்சுமணன் இதுதொடர்பாக ஆர்.கே. நகர் போலீஸில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து ராமசேகரிடம்போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் போலி டாக்டர் என்று தெரிய வந்தது. வெறும் பிளஸ் டூ மட்டுமே படித்துள்ளஅவர் அப்போதே தனது ஜாதிச் சான்றிதழைத் திருத்தி தன்னை தலித் என்று காட்டி ஸ்டான்லிமருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
ஆனால், அவரது சான்றிதழ் போலியானது என்று தெரிந்தவுடன் அவரை ஓராண்டிலேயேகல்லூரியில் இருந்து நீக்கியது நிர்வாகம். இது தொடர்பாக சில நாட்களில் ஜெயலில் இருந்துவிட்டுவந்த ராமசேகர் தனது ஓராண்டு மருத்துவக் கல்லூரி அனுபவத்தை வைத்து டாக்டர் தொழிலைஆரம்பித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட ராமசேகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.