For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக தேர்தல் முடிந்தது: பொது குழுவில் சலசலப்பு ஏற்படுத்த அதிமுக திட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மாவட்ட செயலாளர்கள் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், கடந்த 2 வருடமாக நடந்துவந்த திமுக உட்கட்சித் தேர்தல்கள் முடிவுக்கு வந்துள்ளன.

சென்னை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர்கள் தேர்தல் நேற்று நடந்து முடிந்தன.

தென் சென்னை மாவட்டச் செயலாளராக ஸ்டாலினின் அன்பைப் பெற்ற எம்.எல்.ஏ. அன்பழகன்தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பொறுப்பில் இதுவரை கருணாநிதியின் தீவிர ஆதரவாளரான சைதைகிட்டு இருந்து வந்தார்.

மிக நீண்ட காலமாக இப்பொறுப்பில் அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால்,சமீபகாலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அன்பழகனுக்கு இந்தப் பதவியைத் தரஸ்டாலின் நெருக்குதல் தந்தார்.

இதையடுத்து கிட்டுவை விலகி இருக்குமாறு கருணாநிதி கேட்டுக் கொண்டார். கருணாநிதியின் தீவிரவிசுவாசியான கிட்டு அதை ஏற்று தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.

வட சென்னை மாவட்டச் செயலாளராக பலராமன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரை நீக்கிவிட்டுவேறொருவரைப் போட முயற்சி நடந்தது. ஆனால், தனது பண பலத்தால் பதவியைத் தக்க வைத்துக்கொண்டுவிட்டார் பலராமன்.

போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் இப்பதவிக்கு வருவது 4 வது முறையாகும்.

இத்துடன் திமுக உட்கட்சித் தேர்தல் முடிவடைந்தது.

அடுத்த கட்டமாக ஜூன் 2ம் தேதி கட்சியின் புதிய உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் திமுகவின்பொதுக் குழு கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது.

அப்போது தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய முக்கிய பதவிகளுக்கான தேர்தல்நடைபெறும்.

தலைவராக கருணாநிதியே மீண்டும் தேர்வாவார். அதே போல பொதுச் செயலாளர் பதவியைஅன்பழகனே மீண்டும் பெறுவார்.

ஆனால், பொருளாளர் பதவியில் ஆற்காடு வீராசாமி நீடிப்பாரா என்பது சந்தேகமாக உள்ளது.அவரை கொஞ்ச காலமாகவே கருணாநிதி ஒதுக்கியே வைத்துள்ளார்.

இந்தப் பதவியைப் பிடிக்க ஸ்டாலின் ஆதரவாளர்களான பொன்முடி ஆர்வம் காட்டி வருகிறார்.மேலும் வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன் போன்ற பெருந்தலைகளும் இந்தப் பதவியின் மீது கண்வைத்து கொஞ்ச காலமாகவே கருணாநிதியயை நச்சரித்து வருகின்றனர்.

இவர்களில் யாருக்காவது ஒருவருக்கு பதவி வழங்கப்படுமா அல்லது தொல்லையில் இருந்து தப்பமீண்டும் வீராசாமியையே கருணாநிதி பொருளாளராக நிறுத்துவாரா என்று தெரியவில்லை.

பொதுக் குழுக் கூட்டத்தில் தா.கி.விவகாரம் குறித்து எதுவும் பேச வேண்டாம் என்று அதில்கலந்துகொள்பவர்களுக்கு திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அதிருப்தியில் உள்ள சிலரைத் தூண்டிவிட்டு தா.கி. விவகாரத்தைக் கிளப்ப வைத்து பொதுக்குழுக் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தும் முயற்சிகளில் அதிமுக ஈடுபட்டுள்ளதாகவும் திமுகதலைமைக்குத் தகவல் வந்துள்ளது.

இதனால் பொதுக் குழுக் கூட்டம் மிகப் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X