For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈவ்-டீசிங்: ஊராட்சிமன்ற தலைவர் கைது

By Staff
Google Oneindia Tamil News

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருகே பெண்ணிடம் ஈவ்-டீசிங் வழக்கில் செய்த ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட 3 பேரை பெண் போலீஸ்சார்கைது செய்தனர்.

கருத்துவாம்பாடியைச் சேர்ந்த துரைக்கண்ணுவின் மனைவி குமாரி (21). இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த பாபுவும், இளையராஜாவும்பல நாட்களாக வம்பு செய்து வந்தனர். பொறுமையாக இருந்து வந்த குமாரி நேற்று மனம் நொந்து போய் இந்த இருவரையும்திட்டிவிட்டுச் சென்றார்.

இதையடுத்து இந்த இருவரும் ஊராட்சி மன்றத் தலைவர் சின்னத் தம்பியுடன் சேர்ந்து குமாரியின் வீட்டுக்குச் சென்றனர்.

ஏண்டி, வாடி- போடி என்று குமாரியை ஒருமையில் அழைத்து இவர்கள் தகராறு செய்தனர். இதைத் தட்டிக் கேட்ட குமாரின் கணவர்துரைக்கண்ணுவை உருட்டுக் கட்டைகளால் தாக்கினர். அதைத் தடுக்க வந்த துரைக்கண்ணுவின் தம்பிக்கும் அடி விழுந்தது.

குமாரியையும் இக் கும்பல் தாக்கியது. தாக்குதலில் படுகாயமடைந்த குமாரி திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில்அனுமதிக்கபட்டார்.

இதுகுறித்து குமாரி திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்துஇளையராஜாவையும், ஊராட்சி மன்றத் தலைவர் சின்னத்தம்பியையும், பெருமாளையும் கைது செய்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X