அமெரிக்க பெண்ணை கையை பிடித்து இழுத்து வம்பு செய்த இன்ஸ்பெக்டர்!
சென்னை:
சென்னைக்கு சுற்றுலா வந்த அமெரிக்கப் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து வம்பு செய்துள்ளார்அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன்.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் இரிகா கெர்மேன்டக். இவர் இந்தியாவில் சுற்றுப்பயணம்மேற்கொண்டுள்ளார். ஒரிசாவில் சுற்றுப் பயணம் செய்தபோது சுனில்குமார் என்ற வாலிபருடன்அவருக்கு காதல் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் சேர்ந்து தமிழகத்திற்கு சுற்றுலா வந்திருந்தனர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்த அவர்கள் சென்னை அம்பத்தூரில் வீடு பார்த்துசேர்ந்து வசிக்கத் தொடங்கினர்.
வெள்ளைக்காரப் பெண்ணும்,நம் ஆள் ஒருவரும் சேர்ந்து வாழ்வதைப் பார்த்து அக்கம் பக்கத்தில்இருந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சும்மா இருந்தவர்கள் வாய்க்கு அவல் கிடைத்தது மாதிரிஅருகாமை வீட்டினர் எப்போதும் இந்த இருவரைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்.
சிலர் அதிக உணர்ச்சிவசப்பட்டு அம்பத்தூர் காவல் நிலையத்தில் போய் இதுதொடர்பாகபுகார்கொடுத்தனர்.
வழக்கமாக கொலை கேஸ் என்றாலே ஆற, அமரத் தான் வரும் நம் போலீசார் இதை பெரியவிவகாரமாக எடுத்துக் கொண்டு அம்பத்தூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில் உடனேவிரைந்து வந்தனர்.
அந்த அமெரிக்கப் பெண்ணிடமும் சுனிலிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அமெரிக்கப் பெண் முழு விவரத்தையும் சொன்னார். சுனிலை திருமணம் செய்யஇருப்பதையும் கூறினார். மேலும் இந்தியாவில் தங்கியிருக்க அவரிடம் உரிய ஆவணங்களும்இருந்தன.
இதையடுத்து பேசாமல் திரும்பி இருக்க வேண்டிய போலீசார் அந்தப் பெண்ணிடம் தொடர்ந்து வம்புசெய்தனர். அந்தப் பெண்ணை தமிழில் திட்டிய கிருஷ்ணன் கையைப் பிடித்தும் இழுத்து அசிங்கம்செய்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மீது அந்த அமெரிக்கப் பெண் புகார் கொடுத்துள்ளார்.மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சங்கரை நேரில் சந்தித்த அவர் தனது புகாரை அளித்தார்.
தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததோடு, தகாத வார்த்தைகளால் பேசியும், கையைப் பிடித்தும்இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் வம்பு செய்தார் என்று அதில் இரிகா கூறியுள்ளார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ணனை அழைத்து எஸ்.பி. சங்கர் விசாரணை நடத்தினார். இச்சம்பவம் தொடர்பாக துறைரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அமெரிக்கப் பெண்ணிடம் காசு பறிக்கலாம் என்று நினைத்து அது முடியாமல் போனதால் அவரிடம்இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் வெட்டி வம்பு இழுத்ததாகக் கூறப்படுகிறது.