தமிழகத்தில் விரைவில் மூன்றாவது அணி: ப.சிதம்பரம்
மதுரை:
தமிழகத்தில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சிகள் விரைவில் சூடு பிடிக்கும் என காங்கிரஸ் ஜனநாயகப்பேரவை செயலாளர் ப.சிதம்பரம் கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் பேசுகையில், மத்தியிலும், மாநிலங்களிலும் மற்ற கட்சிகளுடன்கூட்டணிகள் உருவாக்க காங்கிரஸ் தீவிரமாக ஈடுபடும் என்று அக் கட்சியின் தலைவர் சோனியா காந்திகூறியுள்ளார்.
இதன் மூலம் தமிழகத்தில் 3-வது அணி அமைக்கும் முயற்சிகளுக்கு காங்கிரசின் ஆதரவு கிடைக்கும் என்றுநம்புகிறேன். இதனால் விரவில் புதிய அணி உருவாகும்.
தொழிலாளர்களின் பிராவிடண்ட் பண்ட் நிதிக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு குறைத்திருப்பதுகண்டிக்கத்தக்கது. தொழிலாளர்களுக்குய சேம நல நிதிக்கான வட்டி விகிதத்தை கூடுதலாக பெற்றுத் தரவேண்டியது மத்திய அரசின் கடமை என்றார் அவர்.
முன்னதாக சிவகங்கை மாவட்டம் கொம்புக்கரனேந்தலுக்குச் சென்ற அவர், படுகொலை செய்யப்பட்ட முன்னாள்திமுக அமைச்சர் தா.கிருட்டிணனின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.












Click it and Unblock the Notifications