தடைக்கு பழிதீர்க்க சதித்திட்டம் வெடிகுண்டுகளுடன் இருவர் கைது
அரியலூர்:
தமிழக அரசு விதித்த தடையால் ஆத்திரமடைந்த சுப. இளவரசன், தண்டவாளத்தைத் தகர்த்து ரயிலை கவிழ்க்கும்முயற்சியில் ஈடுபட்டனர்.
இந் நிலையில் காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் இன்று அவசரமாக டெல்லி செல்கிறார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், செயல் தலைவர் இளங்கோவன் இடையே கருத்து வேறுபாடுநிலவுவதாலும், இதனால் கட்சியின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாலும் விரைவில் மாநில காங்கிரஸ்தலைமையில் மாற்றம் வரலாம் என்று தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கமல்நாத் சமீபத்தில் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந் நிலையில் நேற்றிரவு சோ.பாலகிருஷ்ணன்தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக செய்திகள் பரவின. கமல்நாத்தின் கூற்றினால் அதிருப்தியடைந்தசோ.பா. உடனடியாக தனது ராஜினாமா கடிதத்தை டெல்லிக்கு பேக்ஸ் செய்துள்ளதாகக் கூறப்பட்டது.
மேலும் மதுரையில் தான் ஏற்பாடு செய்த காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தையும், நிருபர்கள் கூட்டத்தையும்சோ.பா. ரத்து செய்தார். இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்பிவிட்டதாகத்தெரிகிறது.
ஆனால், இதை சோ.பா. மறுத்துள்ளார். பரமக்குடியில் அவசரமாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கட்சியைச்சீரமைப்பது குறித்து கமல்நாத் கருத்துக் கேட்டிருந்தார். அது தொடர்பாகவே நான் கட்சி மேலிடத்திற்கு பேக்ஸ்அனுப்பியிருந்தேன். கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகளை விரைவில் தீர்க்குமாறும் அந்த பேக்ஸ் கடிதத்தில்கூறியிருந்தேன். ராஜினாமா ஏதும் செய்யவில்லை என்றார் அவர்.
ராஜினாமா உண்மை:
இருப்பினும், சோ.பா. ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளது உண்மைதான் என்று அவருக்கு நிெருக்கமானவட்டாரங்கள் உறுதியாக தெரிவிக்கின்றன. தனது தலைமை குறித்து விமர்சிக்கும் அளவுக்குசென்று விட்டபின்னரும் பதவியில் நீடிக்க அவரது மனம் இடம் கொடுக்கவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இளங்கோவன் டெல்லி பயணம்:
இந் நிலையில் தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் இன்று டெல்லி செல்கிறார். சோ.பா. ராஜினாமாகுழப்பம் எழுந்துள்ள நிலையில் இளங்கோவன் டெல்லி செல்வது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
கட்சி நிர்வாகிகள் மாற்றம் மற்றும் காமராஜர் பிறந்த நூற்றாண்டு நிறைவு விழா தொடர்பாகவும் கட்சி மேலிடத்திடம்விவாதிக்க டெல்லி போவதாக அவர் தரப்பில் கூறப்பட்டாலும், சோ.பா. விவகாரம் தொடர்பாகவே அவர் டெல்லிசெல்வதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, காமராஜர் பிறந்த நூற்றாண்டு நிறைவு விழா தொடர்பாக மாநிலம் முழுவதும் இன்று முதல்தொடங்குவதாக இருந்த தனது சுற்றுப் பயணத்தை சோ.பா. ரத்து செய்து விட்டார்.












Click it and Unblock the Notifications