பெண்ணை மானபங்கப்படுத்த முயன்ற நீதிபதி சஸ்பெண்ட்
சென்னை:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள காவாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சாராய வியாபாரியின்மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி பன்னீர்செல்வம் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காவாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் கள்ளச்சாராய வியாபாரி. கள்ளச் சாராயம் விற்றதாககைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கை நீதிபதி பன்னீர்செல்வம்விசாரித்து வந்தார்.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு பெரியசாமியின் வீட்டுக்குச் சென்றார் நீதிபதி பன்னீர்செல்வம். அங்கு தனியேஇருந்த, பெரியசாமியின் மனைவி சல்வியிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் தெரிகிறது.
இதையடுத்து செல்வி எழுப்பிய கூக் குரலைக் கேட்டு ஓடி வந்த கிராமத்தினர் பன்னீர்செல்வத்தைப் பிடித்து கட்டிப்போட்டுவிட்டு போலீஸில் புகார் தெரிவித்தனர்.
இந்தப் புகாரை போலீசார் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிக்கு அனுப்பி வைத்தனர். அவர் மற்றநீதிபதிகளுடன் கலந்து ஆலோசித்தார். இதன் அடிப்படையில், பன்னீர் செல்வத்தை தற்காலிக வேலை நீக்கம்செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இத் தகவலை உயர்நீதிமன்றப் பதிவாளர் ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் தெரிவித்துள்ளார். இனி பன்னீர்செல்வம்மீது நிர்வாரீதியிலான விசாரணை நடக்கும் என்று தெரிகிறது.
இந் நிலையில் இன்று பன்னீர்செல்வம் பாலக்கோடு நீதிமன்றத்துக்கு வரவில்லை. அவர் தலைமறைவாகிவிட்டார்.அவரை நம்பி இன்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட ரிமாண்ட் கைதிகளை போலீசார் பெண்ணாகரம்நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றனர்.