சிறை மாற்றத்தை எதிர்த்து கைதிகள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை சிறையிலிருந்து சேலம் சிறைக்கு 15 கைதிகள், மாற்றப்பட்டதை எதிர்த்து சேலம் சிறையில் உள்ள கைதிகள்உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இதனால் 15 பேரும் மீண்டும் கோவை சிறைக்கே கொண்டு செல்லப்பட்டனர்.
கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 15 கைதிகள், சில காரணங்களுக்காக சேலம் மத்திய சிறைக்குகொண்டுசெல்லப்பட்டனர்.
ஆனால் அங்குள்ள கைதிகள் இவர்களை சேலம் சிறையில் அடைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதைபொருட்படுத்தாத சிறை நிர்வாகம் 15 பேரையும் 4-வது பிளாக்கில் அடைத்தது.
இதையடுத்து சேலம் கைதிகள், கடந்த இரண்டு நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து வேறு வழியில்லாமல், 15 கைதிகளும் மீண்டும் கோவை சிறைக்கே கொண்டு செல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications